திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடி

by Editor / 23-01-2023 09:11:59am
 திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடி

ஹரியானா மாநிலம் யமுனாநகர் மாவட்டம் கர்வான் கிராமத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மூன்று இளைஞர்கள் கிராம மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் உள்ளூர் கடையில் இளைஞர்கள் திருடியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர்களை கையும் களவுமாக பிடித்த மக்கள், சட்டையின்றி அரை நிர்வாணமாக ஊரைச் சுற்றி வரச் செய்தனர். திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sandal beating as punishment for theft

Share via