இரட்டை இலை: இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு

by Staff / 27-01-2023 01:09:39pm
இரட்டை இலை: இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது.தீர்ப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இடைக்கால நிவாரணம் தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இரு அணிகளாக செயல்படும் நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் சின்னம் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சின்னம் முடக்கப்படுமா அல்லது எடப்பாடி தரப்புக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via