கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி துவங்கியது.

by Editor / 30-01-2023 08:26:40am
கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே புத்தளம், மேலப்புத்தளம், கல்விளை, ஆண்டிவிளை, சுவாமிதோப்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான உப்பு உற்பத்தியாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 5 மாதங்கள் உப்பு உற்பத்தி செய்யும் காலமென்பதால் அதற்குமுன்னதாகவே உப்பளங்களில் ஆண் பாத்தி,பெண் பாத்திகளை தயார் செய்து  உப்பு உற்பத்தி செய்வதற்கான பணியில் ஈடுபடுவார்கள்.இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தரத்திற்கேற்றவாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்காக நிலத்தினை தயார் செய்து உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது அப்பகுதியில் உப்பு விளைந்து உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் விற்பனைக்காக வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via