400 கிலோ கஞ்சா பறிமுதலல்

by Staff / 15-09-2022 11:50:15am
 400 கிலோ கஞ்சா பறிமுதலல்

இலங்கை அருகே கல்பிட்டியா துறைமுகத்தில் கடலில் சென்ற ஒரு தமிழக மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அந்தப் படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர், அந்தப் படகில் 10 மூடைகளில் இருந்த 400 கிலோ கஞ்சாவை படகுடன் பறிமுதல் செய்த கடற்படையினர் இதை கடத்திச் சென்ற 5 பேரையும் அவற்றை கடலில் வாங்கி செல்ல வந்திருந்த இலங்கை புத்தளத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.

பிடிபட்ட பரலோக மாதா என்ற நாட்டு படகு தங்கச்சிமடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி சென்று பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சூசையப்பர் பட்டிணம் ரிக்சன், கிறிஸ்டிராஜ், தங்கச்சி மடம் அந்தோணி அடிமை, கீழக்கரை இம்ரான்கான், திருப்புலனி உதயகுமார் என்பதும் தெரியவந்தது.
 

 

Tags :

Share via