மதுரையில் தாய்- மகன் விஷம் அருந்தி தற்கொலை போலீசார் விசாரணை

by Staff / 31-01-2023 12:06:11pm
மதுரையில் தாய்- மகன் விஷம் அருந்தி தற்கொலை போலீசார் விசாரணை

மதுரை கோச்சடை அருகே உள்ள மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர்(46)இவர் எஸ்.எம்ஜெ என்கிற ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வருகிறார்.

இதற்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் ஆக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாய் விஜயலெட்சுமி (73) வுடன் வசித்து வந்த நிலையில் தாயும், மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via