மரியுபோல் நகரில் 1026 உக்ரைன் வீரர்கள் சரண்

by Staff / 13-04-2022 05:16:02pm
மரியுபோல்  நகரில் 1026 உக்ரைன் வீரர்கள் சரண்

மரியுபோல்  நகரில் 1000 ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் நகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ளனர். அங்குள்ள உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்யப் படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உக்ரேன் கடற்படையினர் 36 வது பிரிகேட்டைசேர்ந்த 1026 வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via