ராம பக்தர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்.. 20 பேர் காயம்
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள ரெஜிநகர் பகுதியில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலவரக்காரர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பக்தர்கள் காயமடைந்தனர்.நேற்று ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரக்காரர்கள் கட்டிடங்களில் இருந்து கற்கள் மற்றும் கையெறி வெடிகுண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :