ஏப்ரல் 8ஆம் தேதிவந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி ஹைதராபாத் வருகை தரவுள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் ரயில் நிலையத்தின் புனரமைப்பு மற்றும் ரூ.700 கோடியில் மேற்கொள்ளப்படும் எம்எம்டிஎஸ் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் வருகை தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் பிரதமர் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags :