பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 

by Editor / 26-03-2023 10:02:45am
பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 

கேரளமாநிலத்தில் உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் அமைந்துள்ளது.சாமி ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை
தரிசிப்பதற்காக கடந்த ஜனவரி 14-ம் தேதி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

இதேபோன்று ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவைத்து வழக்கமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில்  பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  இன்று வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது. நாளை காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகின்றனர்.ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

 

Tags :

Share via