காரில் போதை பொரள் கடத்தல்-2 பேர் கைது

by Editor / 03-12-2022 05:16:01pm
காரில் போதை பொரள் கடத்தல்-2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை குறிவைத்து விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது போதைக்கு அடிமையாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிக்காமல் வேகமாக சென்றது. அந்த ககாரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது அதற்குப் பின் செல்ல முடியாமல் கார் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார். காரில் இருந்தஓட்டுநர் மற்றும் இரண்டு பேர் சிக்கினார். அவர்களிடமிருந்து எம் டி எம் ஏ என்ற 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீஸா நடத்திய போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (30) -மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பலர் சேர்ந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ்( 27 ) என்பவர் தொடர்புடன் அவர் பெங்களூரில் பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார் அவர் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் போலீசார். அதில் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரை துணிக்கடை மூலம் தொடர்பு கொண்டு கடைகளுக்கு துணி சப்ளை செய்ய வேண்டும் என அழைத்துள்ளனர். போலீசார் சோதனை சாவடியில் நிறுத்திய போது நிற்காமல் வேகமாக சொல்லுங்கள் என கணேஷ் கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via