மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

by Staff / 13-05-2023 02:22:34pm
மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் 134, பாஜக 65, மஜத 20, மற்றவை 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், மக்களுக்கு நாதழுதழுக்க நன்றி தெரிவித்தார். மேலும், வெற்றிக்காக உழைத்த சித்தராமையா உள்பட அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

Tags :

Share via