தற்கொலைப்படை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு

by Staff / 31-01-2023 01:38:40pm
தற்கொலைப்படை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அங்குள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via