ஆந்திராவின் தலைநகராகும் விசாகப்பட்டினம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டபோது 3 தலைநகரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.
Tags :