பள்ளியில் அதிக மன அழுத்தம் கொடுத்ததால் 14 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை.

by Editor / 23-08-2022 05:02:19pm
பள்ளியில் அதிக மன அழுத்தம் கொடுத்ததால் 14 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவரது மூத்த மகன் சஞ்சய் வயது 14 என்பவர் பேரளம் சங்கரா மெட்ரிகுலேஷன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நன்கு படிக்கக்கூடிய மாணவராக இருப்பினும் பள்ளியில் அதிக எழுத்து பயிற்சி கொடுப்பது அவருக்கு முன் மற்ற மாணவர்களை அடிப்பது போன்றவற்றினால் வேறு பள்ளிக்கு மாற்றுமாறு தந்தையிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். 

இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய் பெட்ரோல் கேனை வீட்டின் மாடிக்கு எடுத்து சென்று உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டான். உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவன் உயிரிழந்ததையடுத்து உடற்கூறாய்வுக்கு பின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.வெங்கடேசன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via