நகைக்கடை உரிமையாளரை கொலை செய்த காவலர் உட்பட ஏழு பேர் கைது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகு புரம் 1 வது தெருவில் நகை கடை அதிபரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த அவரை அரசு மருத்து மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார்.மக்கள் நடமாட்டம் மிகுந்த சோலை அழகுபபுரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதால் மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய காவலர் ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த7பேரிடம் காவல்துறையினர் பல்வேறு கட்டவிசாரணை மேற்கொண்டதில் மணிகண்டனிடம் காவலர் ஹரிஹரபாபு நகை தொழிலுக்காக கொடுத்த கடனை திருப்பி தராதது, மற்றும் காவலரின் மனைவியுடன் நட்பு வைத்திருந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவரவே காவலர் உட்பட ஏழு பேரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது விசாரணை நடத்திவருகின்றனர்.காவலர் கூலிப்படையை ஏவி கொலை செய்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :