கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்.

by Editor / 02-02-2023 07:43:23am
கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமம் அருகே திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு கீழ் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர்  ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலைஅணிவித்து சென்றபோது சாலை விரிவாக்க பணி நடைபெற்ற இடத்தில் சாலை ஓரத்தில் அவர்கள் சென்ற பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இதில் பேருந்தில் இருந்த பக்தர்களில்  20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக  பக்தர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு  வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சை அனுப்பிவைத்தனர்.அங்கு காயம்பட்ட அனைவரும் சிகிச்சைய பெற்று வருகின்றனர்.தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via