இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் -. எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் முதலமைச்சர்

by Staff / 10-10-2022 12:46:28pm
இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் -. எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் முதலமைச்சர்

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும்; அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிடவேண்டும். இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்காதீர். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம்; இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரை காத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via