சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை

by Staff / 27-04-2024 04:35:05pm
சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை

பெங்களூரு ராமேஸ்வர கபே குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் குண்டு வைப்பதற்கு முன்னதாக திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், லாட்ஜில் அவரது உடைமைகள் இருந்ததை வைத்து இங்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதாக என்.ஐ.ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via