உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Staff / 10-10-2022 12:24:24pm
 உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உபி-ன் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இதர பிற்பட்டோர் வகுப்பினருக்காக பாடுபட்டவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via