ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

by Staff / 02-02-2023 01:44:13pm
ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசுகளும், அதிகாரிகளும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் போதைப்பொருள் கடத்தல் நிற்கவில்லை. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் 16 சோப்புகளுக்குள் போதைப்பொருள்களை மறைத்து வைத்திருந்தபோது டிஆர்ஐ அதிகாரிகளால் பிடிபட்டார். ரூ. 33.6 கோடி மதிப்புள்ள 3.36 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via