காதலர் தினத்தையொட்டி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு. 

by Editor / 13-02-2023 10:01:08pm
காதலர் தினத்தையொட்டி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு. 


நாகர்கோவிலில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: -
திருவண்ணாமலையில் நடந்த 4 ஏ. டி. எம். பணம் கொள்ளை விவகாரத்தில் குமரி மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17 சோதனை சாவடிகளிலும் போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸ் நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியும் கலாசாரம் அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் உபயோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ரேஸ் டிரைவிங் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via