ஏடிஎம் கொள்ளை - குற்றவாளிகள் நீதிபதி முன் ஆஜர்

by Staff / 18-02-2023 12:17:21pm
ஏடிஎம் கொள்ளை - குற்றவாளிகள் நீதிபதி முன் ஆஜர்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். திருவண்ணாமலையில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12ஆம் தேதி மர்ம கும்பல் ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொள்ளைகுழுவின் தலைவன் உள்பட ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரை காவல் துறையினர் ஹரியானாவில் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட இருவரும், திருவண்ணாமலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

 

Tags :

Share via