வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை

by Staff / 22-02-2023 04:36:36pm
 வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை.தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் இவரது சகோதரர் அத்திப்பழம் என்பவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் குடும்பத்தினருடைய முன் விரோதம் இருந்துள்ளது இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரிஸ் புரத்தில் உள்ள தனது நகை அடகு கடைக்கு காரில் வந்துள்ளார் அப்போது காரில் இருந்து இறங்கும் போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே இழுத்துப் போட்டு ஓட ஓட விரட்டி அவரது அலுவலகம் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் சிப்காட் போலீசார் உடனடியாக வந்து அந்தப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via