மாவோயிஸ்ட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார் பலி.

by Editor / 26-02-2023 09:33:08am
மாவோயிஸ்ட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார்  பலி.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. மாவோயிஸ்ட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமுராம் நாக், உதவி கான்ஸ்டபிள் குஞ்சம் ஜோகா மற்றும் சைனிக் வஞ்சம் பீமா என அடையாளம் காணப்பட்டனர். மற்றும் 5 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. மாவோயிஸ்டுகள் சிலரும் காயமடைந்ததாகத் தெரிகிறது. ஜாகிர் குடா வனப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​உஷாரான மாவோயிஸ்டுகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததால், ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஜாகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.பிறகு,தேடுதல் பணி தொடங்கியது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவிக்கும் பொது: மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நக்சல்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளஅவர்  ஜவான்களின் தியாகம் வீண் போகாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via