2 மின் உதவி பொறியாளர்கள் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று பழுது நீக்கும் பணிக்காக மின்கம்பத்தில் ஏறியபோது பணியாளர் ஜெய்சங்கர்(50) மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்நிலையில், பணியின்போது கவனக்குறைவாக இருந்த உதவி மின் பொறியாளர்கள் வேலாயுதம், ரகுநாதன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் உத்தரவிட்டார்.
Tags :