508 பால்; குடம் ஊர்வலம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

by Editor / 27-02-2023 11:15:22pm
 508 பால்; குடம் ஊர்வலம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

 
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 71ஆம் ஆண்டு 10 நாட்கள் வசந்த உற்சவப் பெருவிழாவானது கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான இன்று காலை 508 பால்குடங்கள் பம்பை உடுக்கை, மங்கல இசை வாத்தியங்கள், பேண்டுவாத்தியங்கள் என பலவகை இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via