லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

by Staff / 02-03-2023 12:28:55pm
லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் மேகநாதன் (65), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் சென்றபோது, அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டி இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மேகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via