மனைவி கருப்பாக இருந்ததால் கொலை

by Staff / 04-03-2023 12:42:27pm
மனைவி கருப்பாக இருந்ததால் கொலை

'கருப்பாக இருக்கிறாய்' என்று கூறி மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கலபுரகி மாவட்டம், ஜேவர்கி தாலுகா கெல்லூரைச் சேர்ந்த காஜா என்பவருக்கும், ஃபர்சானா (28) என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஃபர்சானா கருப்பாக இருந்ததால் காஜா அவரை தினமும் சித்திரவதை செய்து வந்துள்ளார். முகத்தில் எவ்வளவு பவுடர் போட்டாலும் 'ஹீரோயின் லுக் வரவில்லை' என்று கூறி அவமானப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, காஜா தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார்.

 

Tags :

Share via