தீக்குளித்த 2 குழந்தைகளின் தாய் பலி

by Staff / 04-03-2023 02:39:34pm
 தீக்குளித்த 2 குழந்தைகளின் தாய் பலி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் வர்த்தான்விளையை சேர்ந்தவர் சோபிதர்(44). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (35). இத்தம்பதிக்கு 3 மற்றும் 2 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக சோபிதர் - விஜிலாயிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனம் உடைந்து விஜிலா  கடந்த 26 ம் தேதி உடம்பில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய விஜிலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜிலா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகுவதால் ஆர். டி. ஓ. விசாரணையும் நடத்தப்பட உள்ளது. 2 பெண் குழந்தைகளின் தாய் தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via