மாணவி உயிரை பறித்த கல்வி கட்டணம்
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பெரும் சோக சம்பவம் நடந்துள்ளது. தனியார் பள்ளியில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கட்டணம் செலுத்தாததால், தேர்வு எழுத, பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருந்தும், பணக் கஷ்டம் காரணமாக சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. தேர்வெழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :