ஏசி வெடித்து பெண், குழந்தைகள் பலி
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். சக்திநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் திங்கள்கிழமை மாலை திடீரென ஏசி வெடித்ததால் அறை முழுவதும் பெரும் தீ பரவியது. இதில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த தாயும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :