சாக்கடையில் கிடந்த சிறுமியின் சடலம்

by Staff / 09-03-2023 04:54:48pm
சாக்கடையில் கிடந்த சிறுமியின் சடலம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சமீபத்தில் காணாமல் போன சிறுமியின் சடலம் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. ஜேசிபி மூலம் பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிரம்மபுரி காவல்நிலைய பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கடத்தி யாராவது கொன்றார்களா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via