5 வட. இந்தியர்களுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை

by Staff / 09-03-2023 05:09:20pm
5 வட. இந்தியர்களுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை

மதுரை சுற்று வட்டாரத்தில் வேன் மூலம் ஆடு, மாடுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஹக்முதீன், ஷேகுல், இர்பான், சுபைர் மற்றும் நசீர் ஆகிய 5 வட இந்தியர்கள் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குற்றம் சாட்டப்பட்ட வட இந்தியர்கள் கால்நடைகளை திருடிய சிசிடிவி காட்சிகள் உள்ளது என்றும்குற்றம் சாட்டப்பட்டுள்ள வட இந்தியர்கள் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளது இவர்கள் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்கள். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகி தப்பிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலைமறைவாக கூடாது, சாட்சியங்களை கலைக்கும் செயலில் ஈடுபடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் மனுதாரர்கள் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் காவல்துறையினர் புதிய வழக்கை பதிவு செய்து உடனடியாக அவர்களை கைது செய்யலாம் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

 

Tags :

Share via