இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் கைது

by Staff / 10-03-2023 04:32:37pm
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் கைது

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த தப்பக்குட்டை கிராமம், அருந்ததியர் காலணியை சேர்ந்த லாவண்யா (23). இவரை வெண்ணந்தூர் அருகே வெள்ள பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.   இந்நிலையில் லாவண்யா தனது தாய் வீடான தப்பக்குட்டை பகுதியில் தனது குழந்தையுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜ், லாவண்யாவிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.   இது குறித்து லாவண்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் டேவிட்ராஜ் மற்றும் இவரது நண்பர் சிவா ஆகியோர்  லாவண்யா வீட்டிற்கு வந்து பிரச்சினையை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து லாவண்யா மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில்  டேவிட்ராஜ் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, சங்ககிரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via