போலிடாக்டர் பட்டம் வழங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஹரீஸ்

by Editor / 12-03-2023 05:03:25pm
போலிடாக்டர் பட்டம் வழங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஹரீஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஹரிஷின் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இதுவரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பட்டம் வழங்குவதாக கூறி வசூல் செய்த பணத்தில், பாதியை நிகழ்ச்சிக்காகவும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போலிடாக்டர் பட்டம் வழங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஹரீஸ் போன்று ஏராளமானவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் சார்பிலும்,போலி அமைப்புக்களை நிறுவியும் இந்த விலைமதிப்பில்லாத பட்டங்களை விற்பனை செய்துவருவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் ஆசை.

 

Tags :

Share via