பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

by Staff / 16-03-2023 12:34:02pm
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் தங்கப்பாண்டி 17 தங்கப்பாண்டி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு மேய்த்து வந்துள்ளார்.சில நாட்கள் ஆடுகளை மேய்க்காமல் வீட்டில் டிவி பார்த்து வந்துள்ளார் அப்போது குடும்பத்தினர் தங்கபாண்டியை ஆடு மேய்க்காமல் வேலைக்கு செல்லாமலும் இருந்து வருகிறாயா என சத்தம் போட்டு உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கப்பாண்டி ஆடு மேய்க்க சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை தேடிப்பார்த்து உள்ளனர் அப்போது சாப் டூர் பகுதியில் தூக்கு போட்டு இறந்துள்ளார்.இது குறித்து சாப்ட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via