கஞ்சா விற்பனை 150 கிராம் பரிமுதல்

by Staff / 18-03-2023 03:00:05pm
கஞ்சா விற்பனை  150 கிராம் பரிமுதல்

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அருள் பிரகாஷ், இவருக்கு நேற்று தொண்டாமுத்தூர் முதல் கெம்பனூர் சாலையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ப்பனை நடைபெறுவதாக இரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்ட பொழுது, அங்கு தொண்டாமுத்தூரை சேர்ந்த 22 வயதான, ரப்பூல் இஸ்லாம் என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பரிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via