ஆடிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி

by Staff / 19-03-2023 01:57:37pm
ஆடிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற இடத்தில் வியாழக்கிழமை ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அல்லிபுரம் பகுதியில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் ராணி (30) என்ற பெண் கலந்து கொண்டார். அந்தப் பெண் அங்கு டிஜே பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினார். ஆடிக்கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென்று சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அப்பெண்ணை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via