சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்திய போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்த டிஐஜி

by Editor / 17-06-2022 05:15:18pm
சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்திய போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்த டிஐஜி


மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்கள் ஒரே சமயத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் மதுவிலக்கு போலீசார் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது. பொறுப்பு ஆய்வாளர் ஆரோக்கியமேரி உதவி ஆய்வாளர்சேகர்  தலைமை காவலார்  தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்த தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அங்கு பணியாற்றிய 14 காவலர்களையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via