நிசான் கார் தயாரிப்பு ஆலையில் 2,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு

by Staff / 13-02-2023 12:29:45pm
 நிசான் கார் தயாரிப்பு ஆலையில் 2,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்குமான ரூ.3,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சென்னை ஓரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 2,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via