பழனிமுருகன் கோவிலில்  பங்குனி உத்திரத்திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது 

by Editor / 23-03-2023 09:43:18am
பழனிமுருகன் கோவிலில்  பங்குனி உத்திரத்திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது 

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .
வருகிற 29-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது.திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 

Tags :

Share via