குழந்தை திருமணம்... 1800 பேர் கைது

by Staff / 23-03-2023 12:35:38pm
குழந்தை திருமணம்... 1800 பேர் கைது

குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் அசாம் மாநில காவல்துறை, குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையில் சுமார் 1,800 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. ஜனவரி 23 அன்று மாநில அமைச்சரவை இதுதொடர்பான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததில் இருந்து 15 நாட்களுக்குள் 4,004 குழந்தைத் திருமண வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கைது செய்வது மூலம் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

 

Tags :

Share via