தூத்துக்குடியில் பாஜக டிஜிட்டல்  போர்டுகளை அகற்றிய மாநகராட்சி.

by Editor / 24-03-2023 10:20:19am
தூத்துக்குடியில் பாஜக டிஜிட்டல்  போர்டுகளை அகற்றிய மாநகராட்சி.

பா.ஜ.கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தூத்துக்குடிக்கு இன்று காலை விமானம் மூலம் வந்தார்.பின்னர் அவர், தேவர், அம்பேத்கர், குரூஸ்பர்னாந்து, வ.உ.சிதம்பரனார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத்தொடர்ந்து அபிராமி மஹாலில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று அண்ணாமலை வருகையையொட்டி பா.ஜ.க., வினர் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க.,வினர் டிஜிட்டல் போர்டுகளை முழுவதும் அப்புறப்படுத்தினர். இதனையறிந்த பா.ஜ.க., வினர் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர் தங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுப்பட முயற்சிமேற்கொண்டதால் 
தகவலறிந்த தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் மற்றும் தென்பாகம் சப்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பா.ஜ.க., வினரை சமாதனம் செய்தனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் டிஜிட்டல் பேனர்களை மீண்டும் வழங்கினர். இதனையடுத்து மீண்டும் அதே இடங்களில் பா.ஜ.க.,வினர் பேனர்களை வைத்தனர்.
 

 

Tags :

Share via