போக்சோ வழக்கில் 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10ஆயிரம் அபராதம்.

by Editor / 25-03-2023 05:22:03pm
போக்சோ வழக்கில் 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10ஆயிரம் அபராதம்.

 
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 04.03.2018 அன்று பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் தங்கபாண்டி (61) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய  புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  அன்னதாய் புலன் விசாரணை செய்து கடந்த 31.05.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி   சுவாமிநாதன் இன்று (25.03.2023) குற்றவாளியான தங்கபாண்டி என்பவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்   அன்னதாயையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  முத்துலெட்சுமியையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர்  செல்வி. முத்துலெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   பாலாஜி சரவணன்  பாராட்டினார்.
 

 

Tags :

Share via