கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்குமென தகவல்.

by Editor / 02-04-2023 09:37:46am
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்குமென தகவல்.

வடமேற்கு மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை, தென் தீபகற்ப இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்குமெனவும்,மக்கள் கடுமையான வெப்பாத்தை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via