ராகுல் காந்திக்கு ஏப்.13 வரை ஜாமீன் நீட்டிப்பு

by Staff / 03-04-2023 05:31:59pm
ராகுல் காந்திக்கு ஏப்.13 வரை ஜாமீன் நீட்டிப்பு

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் விசாரணை நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து. இதையடுத்து அவர் மக்களவை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ராகுல் காந்தியின் சிறை தண்டனையும் 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via