தீவிரவாதிகள் போலீசாரால் கைது

by Staff / 06-04-2023 04:50:57pm
தீவிரவாதிகள் போலீசாரால் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் போலீஸ் பிடியில் இருந்து இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தப்பியோடினர். புதன்கிழமை அதிகாலை 2 பயங்கரவாதிகள் போலீசாரிடம் இருந்து தப்பினர். அவர்கள் தப்பி ஓடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், தப்பியோடிய பயங்கரவாதிகள் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக பாரமுல்லா போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி உள்ளது. தீவிரவாதிகளை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Tags :

Share via