கேரளாவுக்கு சென்ற கார் பிக்கப்வேன் மீது மோதியது.பரமகுடியை சேர்ந்தவர்கள் காயம். 

by Editor / 12-04-2023 09:21:39am
கேரளாவுக்கு சென்ற கார் பிக்கப்வேன் மீது மோதியது.பரமகுடியை சேர்ந்தவர்கள் காயம். 

பரமக்குடியில் இருந்து கேரள மாநிலத்திற்கு ஆலயம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக பரமக்குடி சுந்தர் நகர் பகுதியைச் சார்ந்த அழகர்சாமி, மற்றும்  ஹரிராம், முரளிதரன், ஜனார்த்தனன், ஆகிய நான்கு நபர்கள் ஒரு காரில் பரமக்குடியில் இருந்து வந்துள்ளனர். இந்த காரை பரமக்குடி எமனேஸ்வரம் காமராஜர் நகரைச் சார்ந்த குருசாமி மகன் பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கார் தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகிலுள்ள சுப்ரமணியபுரம் அருகே உள்ள தனியார் கல்குவாரி அருகே வரும்பொழுது ஓட்டுநர் கண் அயர்ந்ததால் செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம் நோக்கி மரவள்ளி கிழங்கு ஏற்றச் சென்ற பிக்கப் வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த பிரபாகரன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்து அணில் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் விரைந்து வந்து காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடர்பு கொண்டு எந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இல்லை என்று தகவல் அறிந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில் காயம் பட்டவர்களை ஏற்றி அனுப்பினர். அதன் பின்பு 108 வாகனங்கள் தாமதமாக வரவே அந்த வாகனத்தில் பிக்கப் வாகனத்தை ஓட்டிச் சென்ற அணிலை ஏற்றி அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடந்த விபத்து தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விபத்தில்  பலத்த காயமடைந்த சிலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via