ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து 100 நாட்கள் வேலையில் பணித்தள பொறுப்பாளர் தற்கொலை.
திருமங்கலம் கள்ளிக்குடி வட்டம் மைட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி(30). இவரது கணவர் கணேஷ். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமிக்கு 100 நாட்கள் வேலையில் பணித்தள பொறுப்பாளர் பணிக்கான ஆணையை கலெக்டர் பிறப்பித்தார். இதனிடையே முத்து வீரக்குமார், பாலமுருகன் ஆகியோர் இடையூறு கொடுத்ததால் மனமுடைந்த நாகலட்சுமி, இன்று சிவரக்கோட்டையில் இருந்து திருமங்கலம் நோக்கிக் சென்ற அரசுப் பேருந்திலிருந்து குதித்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நாகலட்சுமி திருமங்கலம் ஜி.ஹெச்சில் முதலுதவி பெற்று சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :