திருநங்கைகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி.
புதுச்சேரியில் நடைப்பெற்ற திருநங்கையர் தின விழாவில் கலந்துகொண்டு சபாநாயகர் செல்வம் பேசும்போது:புதுச்சேரியில் உள்ள திருநங்கைகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்காக புதுச்சேரியில் திருநங்கைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அடுத்த ஆண்டிற்குள் அவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிதரப்படும்.மேலும் திருநங்கைகள் மரியாதையோடு நடத்தவேண்டும் என மத்திய அரசு அராசானை வெளியிட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் விரைவில் அந்த அரசாணை நடைமுறைபடுத்தப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
Tags :